| 245 | : | _ _ |a உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம் - |
| 246 | : | _ _ |a புனித செயிண்ட் தாமஸ் ஆலயம் |
| 520 | : | _ _ |a உதகமண்டலத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ள சபை பெரிதாக வளர்ந்தது. அதிக அளவில் ஜனங்கள் வரத்தொடங்கினர். இடப்பற்றாக்குறையை போக்கும் விதமாக 1853 ஆம் ஆண்டில் மறைமாவட்ட பிஷப்புக்கு உதகமண்டலத்தில் கூடுதல் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று ஏரியின் தெற்கே உள்ள மேட்டுப்பகுதியில் இவ்வாலயம் புனிதர் செயிண்ட் தாமஸ் நினைவாக 1869 ம் ஆண்டு ஜெனரல் ஹோவர்ட் டாக்கர் என்பவரால் தொடங்கப்பட்டு 1870 ஆம் ஆண்டு ஏரியை காணும் விதமாக ரூ 634,050 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா லார்ட் பிஷப் ரெவ். ராபர்ட் மில்மன்,அவர்கள் ஏப்ரல் 13,1371 அன்று பொது மக்கள் வழிபாட்டிற்கான தேவாலயத்தை திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற முதல் ஞானஸ்நானம் லெப்டினன்ட் எஃப். டபிள்யூ. போட்லர் மகன் வில்போர்ட் ஹென்றிக்கு 8 ஜூன் 1878 இல் நடந்தது. செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் முதல் திருமணம் ஜி. ஆர். பெர்ட்ராமுடன் எச். சி. போன்ஜோர்க்கு ஆகஸ்ட் 1, 1880 அன்று நடை பெற்றது. இத்தேவாலயத்தில் முதல் இந்திய திருமணம் நவம்பர் 30, 1881 அன்று நடைபெற்றது. ஆங்கில அரசாங்கம் தேவாலயத்தை முழுவதுமாக 1940 இல் மிஷனிடம் ஒப்படைத்தது. |
| 653 | : | _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், இயேசு, தேவாலயம், செயின்ட் தாமஸ், செயிண்ட் தாமஸ், புனித தாமஸ் தேவாலயம், சர்ச், ஊட்டி, கோத்தகிரி, நீலகிரி, ஆங்கிலேயர், கல்லறைத் தோட்டம், கல்லறைகள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 | : | _ _ |a 1870 |
| 909 | : | _ _ |a 8 |
| 910 | : | _ _ |a 150 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. |
| 914 | : | _ _ |a 11.414744978891 |
| 915 | : | _ _ |a 76.702251434326 |
| 922 | : | _ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 926 | : | _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 927 | : | _ _ |a உதகமண்டலத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் தேவாலயத்தில் உள்ள சபை பெரிதாக வளர்ந்தது. அதிக அளவில் ஜனங்கள் வரத்தொடங்கினர். இடப்பற்றாக்குறையை போக்கும் விதமாக 1853 ஆம் ஆண்டில் மறைமாவட்ட பிஷப்புக்கு உதகமண்டலத்தில் கூடுதல் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று ஏரியின் தெற்கே உள்ள மேட்டுப்பகுதியில் 1860 ஆம் ஆண்டு புதிய தேவாலய திட்டத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி பிஷப் தேவாலயம் கட்ட ரூ. 38,642 / - என்ற மதிப்பீடு செய்தார். பல்வேறு நிதிச் சிக்கல் மற்றும் நிர்வாக முடிவுகளுக்காக காத்திருந்து பின்னர் மே 1, 1867 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயம் புனிதர் செயிண்ட் தாமஸ் நினைவாக 1869 ம் ஆண்டு ஜெனரல் ஹோவர்ட் டாக்கர் என்பவரால் தொடங்கப்பட்டு 1870 ஆம் ஆண்டு ஏரியை காணும் விதமாக ரூ 634,050 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா லார்ட் பிஷப் ரெவ். ராபர்ட் மில்மன்,அவர்கள் ஏப்ரல் 13,1871 அன்று பொது மக்கள் வழிபாட்டிற்கான தேவாலயத்தை திறந்து வைத்தார். |
| 929 | : | _ _ |a இத்தேவாலயத்தில் பின்புறத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில்எட்வர்ர்டு வில்லியம் ஸ்மித் என்பவரின் மனைவி லாரா சார்லாட்டி என்பவரின் சிற்பம் அமைந்துள்ளது. சிறந்த கலைப்பாணியில் இச்சிற்பம் எழிலாக ஒரு தேவதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. |
| 930 | : | _ _ |a இவ்வாலயம் புனிதர் செயிண்ட் தாமஸ் நினைவாக 1869 ம் ஆண்டு ஜெனரல் ஹோவர்ட் டாக்கர் என்பவரால் தொடங்கப்பட்டு 1870 ஆம் ஆண்டு ஏரியை காணும் விதமாக ரூ 634,050 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா லார்ட் பிஷப் ரெவ். ராபர்ட் மில்மன்,அவர்கள் ஏப்ரல் 13,1371 அன்று பொது மக்கள் வழிபாட்டிற்கான தேவாலயத்தை திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற முதல் ஞானஸ்நானம் லெப்டினன்ட் எஃப். டபிள்யூ. போட்லர் மகன் வில்போர்ட் ஹென்றிக்கு 8 ஜூன் 1878 இல் நடந்தது. செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் முதல் திருமணம் ஜி. ஆர். பெர்ட்ராமுடன் எச். சி. போன்ஜோர்க்கு ஆகஸ்ட் 1, 1880 அன்று நடை பெற்றது. இத்தேவாலயத்தில் முதல் இந்திய திருமணம் நவம்பர் 30, 1881 அன்று நடைபெற்றது. இந்த தேவாலயம் ஐரோப்பிய சபையால் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டது. சூயஸ் கால்வாய் 1879 இல் திறக்கப்பட்டது, இதன் மூலம் ஐரோப்பியர்கள் அடிக்கடி தாய் நாடு சென்று திரும்ப முடிந்தது. இதனால் உதகமண்டலத்தில் வாழும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆகையால் இத் தேவாலயத்தில் பெரும்பாலும் பூர்வீக பிராட்டஸ்டன்ட் மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரெவ்.சாமுவேல் பால் இங்கு தமிழ் சேவைகளை 1880 இல் தொடங்கினார். இத்தேவாலயத்தின் கல்லறைகள் அக்டோபர், 2,1877 ஆண்டு முதல் கட்டப்பட தொடங்கிற்று. பின்னர் பல முக்கிய ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினர் கல்லறைகளும் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சுவாமி விவேகானந்தரின் ஸ்டெனோகிராஃபர் ஜே ஜோசியா குட்வின் கல்லறையும். அதுபோல டைபாய்டு காரணமாக குட்வின் ஜூன் 2, 1898 அன்று உதகமண்டலத்தில் காலமானார் அவரது கல்லறையும் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ளது. ஆங்கில அரசாங்கம் தேவாலயத்தை முழுவதுமாக 1940 இல் மிஷனிடம் ஒப்படைத்தது. |
| 932 | : | _ _ |a செயிண்ட் தாமஸ் தேவாலயம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஐரோப்பியர்களின் கட்டிடக்கலைப்பாணியில் இத்தேவலாயம் விளங்குகிறது. |
| 933 | : | _ _ |a தென் இந்திய திருச்சபை |
| 934 | : | _ _ |a அண்ணாமலை கோயில், துரூக் கோட்டை, சிஎஸ்ஐ தூய கிறித்துவ தேவாலயம் |
| 935 | : | _ _ |a உதகையின் மையப்பகுதியில் ஏரியின் தெற்கே இத்தேவாலயம் அமைந்துள்ளது. |
| 936 | : | _ _ |a காலை 8.00 மணி, 11.00 மணி |
| 937 | : | _ _ |a உதகமண்டலம் |
| 938 | : | _ _ |a உதகமண்டலம் |
| 939 | : | _ _ |a கோயம்புத்தூர் |
| 940 | : | _ _ |a உதகமண்டல விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000335 |
| barcode | : | TVA_TEM_000335 |
| book category | : | கிறித்துவம் |
| cover images TVA_TEM_000335/TVA_TEM_000335_உதகை_செயிண்ட்-தாமஸ்-தேவாலயம்-0025.jpg | : |
|
| Primary File | : |